சிரிக்க... சிந்திக்க...1


➡ரமேஷ் : டேய் மச்சான்... எங்கடா இருக்க?
சுரேஷ் : வீட்லதான்டா இருக்கேன்...
ரமேஷ் : அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!
சுரேஷ் : ஏன்டா? என்ன விஷயம்?
ரமேஷ் : அது இல்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா
சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி
போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்.....

*******************************************

➡அம்மா : என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கல!!
நீதிபதி : ஏன் ஸ்கூட்டரை திருடினே..?
கைதி : டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!

*******************************************

➡யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்?
நீங்க அமைதியா இருந்தா அது யோகா
உங்க மனைவி அமைதியா இருந்தா அது யோகம்
அம்புட்டுத்தான் !!!

*******************************************

➡நீ.. நீயாக இரு !!
நேற்று போல் இன்றில்லை..
இன்று போல் நாளையில்லை..
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான்
எனவே நீ.. நீயாக இரு

*******************************************

➡சிந்தனை துளிகள் !!
⏩ நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே,
அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே...
அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும்...!!

⏩ வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...
சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே
முதல் காரணம்...!!

⏩ உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை விட்டு கொடுக்காதே...

அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!
⏩ உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்...
நீயும் உண்மையாய் இரு...!!

*******************************************

➡விடுகதைகள் !!
⏩ சின்ன வெங்காரம், வீடெல்லாம் சிங்காரம் அது என்ன? - தீபம்

⏩ விதைக்காத விதை மண்ணிலே, அறுக்காத கதிர் விண்ணிலே அது என்ன? - சூரியன்

⏩ பாதுகாப்பான பெட்டிக்குள் பலரும் விரும்பும் கடிகாரம் அவன் யார்? - இதயம்

⏩ அம்மா புடவையை மடிக்க முடியாது, அப்பா பணத்தை என்ன முடியாது அவன் யார்? - வானம், விண்மீன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2